தெற்கு அதிவேக நெடுசாலையில் பல வாகனங்கள் விபத்துக்கு காரணமான உயிரினம்!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 4.2 கிலோமீற்றர் பகுதியில் வீதியின் குறுக்கே வந்த நீர் உடும்பு ஒன்றினால் பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
அதிவேக நெடுஞ்சாலையில் ஓடும் லொறி ஒன்று நீர் உடும்பு ஒன்றை மோதுவதைத் தவிர்த்ததால் பயணிகள் பேருந்து, வேன் மற்றும் கார் உள்ளிட்ட பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.
மூவர் வைத்தியசாலையில்
நேற்று (21) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீதியில் இறந்து கிடந்த ஆமை ஒன்றின் சடலத்தை நீர் உடும்பு உண்பதை லொறிச் சாரதி கண்டு அதனைத் தவிர்க்க முற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
எனினும், லொறி அதன் மீது பாய்ந்து, திடீரென நின்றதால், பின்னால் வந்த பேருந்து, வேன் மற்றும் கார் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன.