பல சேவைகளை இரத்து செய்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ்
பல விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கையின் உள்நாட்டு தேசிய விமான நிறுவமான, ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் பல விமான சேவைகள் அண்மைய நாட்களில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் விமானத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை சீர் செய்வதற்கு தமது குழுக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், வழக்கமான விமான பயண அட்டவணையை விரைந்து மீட்டெடுக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் கூறியுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இவ்வாறு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
இதனால், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு மற்றும் ஹோட்டல் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேநேரம், வாடிக்கையாளர்களின் பொறுமைக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி கூறியுள்ள நிறுவனம், இதனால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மன்னிப்பும் கோருவதாக குறிப்பிட்டுள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        