கோவிலில் வேலை செய்துகொண்டிருந்தவருக்கு நேர்ந்த கதி
பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரெய்க் தோட்ட மேற்பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணியம் கோவிலில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி கொங்கிறீட் விழுந்து பலியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பழைய கொங்கிறீட் பகுதியை அகற்றி கொண்டிருந்தவரின் தலையில் கொங்கிறீட் விழுந்ததில் ஒருவர் மரணமடைந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (02) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பண்டாரவளை, கிரெய்க் தோட்ட மேல் பிரிவைச் சேர்ந்த டி. சுப்பிரமணியம் (65) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அந்த கோவிலின் பழைய பகுதிகளை அகற்றும் போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.