திருவிழா ஊர்வலத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நடந்த பெரும் அசம்பாவிதம்
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 09ஆம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (06) இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த குடும்பஸ்தர் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான என தெரியவந்துள்ளது.
ஊர்வலத்தின் போது பட்டாசு கொளுத்திய நிலையில் ஒரு பட்டாசு வெடிக்காததால் குறித்த நபர் அதை காலால் மிதித்த போது பட்டாசு வெடித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.