24 மணி நேரமும் எனது வீடு திறந்தே உள்ளது! மகிந்தவின் சகாக்கள் வரவில்லை வியாழேந்திரன் பகிரங்கம்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை நான் மறைத்து வைத்திருப்பதாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் அப்பட்டமான பொய்களை கூறிவருகின்றனர்.
அவர்கள் 24 மணி நேரமும் எனது வீட்டிற்கு வந்து சோதனை செய்யலாம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் பிரதமர் உட்பட அரசாங்கத்தினர் யாராக இருந்தாலும் ஊழல் செய்தமை நிரூபிக்கப்பட்டால் அவர்களுடனான உறவை உடனே முறித்துக்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,