வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி இல்லையாம்; பக்தர்கள் கவலை!
வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில், சிவபெருமானுக்கு சிறப்பான நாளாக கருதப்படும் சிவராத்திரி தினமன்று பகலில் மாத்திரம் பூஜைகள் செய்வதற்கு ஆலய நிர்வாகத்திற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலய பூசாரியார் மற்றும் ஆலய முக்கியஸ்தர்கள் பொலிஸாரால் அழைக்கப்பட்டு விபரங்கள் பெறப்பட்டுள்ளது.
ஆதிசிவனை கையப்படுத்திய தொல்பொருட்திணைக்களம்
அதேவேளை வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருட்திணைக்களத்திற்கு கீழ் உள்ளதாக தெரிவித்து, அந்த திணைக்களம் மற்றும் காவல்துறையால் பொதுமக்கள் வழிபாடுகளை மேற்கோள்வதற்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த வருடம் சிவாரத்திரி தினமன்று மாலை 6 மணிக்கு பின்னர் சிவராத்திரி பூஜைகளை செய்ய முற்ப்பட்ட 8 பேர் அடாவடியான முறையில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அது தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கைது செய்யப்பட்ட 8 பேரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்த நீதிபதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கினையும் தள்ளுபடி செய்தார்.
இது தொடர்பில் ஆலயத்தின் பூசகர் கூறுகையில்,
இம்முறை சிவராத்திரி விரத பூஜைகளை காலை முதல் மாலை 6 மணி வரை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் 6 மணியின் பின்னர் பிறிதொரு பகுதியில் ஆலயத்திற்கு வெளியே சிவனுக்கான இரவு அனுஸ்டானங்களை செய்வதற்கும் ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை சிவராத்த்ரி என்பது இரவு முழுவதும் நித்திரை கொள்ளாது , சினவுக்கு அபிசேக அலங்காரங்கள் செய்து வழிபடும் விரtதமாகும்.
இந்நிலையில் ஆதி சிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தில் இரவு வழிபாடு இடம்பெறாது என கூறப்பட்டுள்ளமை இந்துமக்கள் மனங்களை வேதனையடை செய்துள்ளது.