தண்டவாளத்தில் பாதம் இல்லாத சடலம் மீட்பு; நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு நடந்த்து என்ன?
புகையிரத தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் ஆண்ணொருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெயாங்கொடை-வதுரவ ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தினால் பிரதான புகையிரத போக்குவரத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் சந்தேகம்
வெயாங்கொட மொட்டுன்ன பிரதேசத்தில் வசித்து வந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான ரொஷான் மஹாநாம என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தண்டவாளத்தில் நடந்துச் சென்ற நபர் ஒருவர், தண்டவாளங்களுக்கு இடையில் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு, வெயாங்கொடை புகையிரத நிலையத்திற்கு தகவல் வழங்கிய நிலையில் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இறந்தவரின் கால்களில் ஒன்று சடலம் இருந்த இடத்திலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் விழுந்து கிடந்துள்ளது. மேலும் இறந்தவருடையது என்று சந்தேகிக்கப்படும் ஒரு ஜோடி காலணிகள் மற்றும் கோடாரி ஆகியவையும் அருகில் கிடந்தன.
கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்த வெயாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்ஒண்டு வருகின்றனர்.