தமிழகத்தின் உயிர்காக்கும் உதவிகள் இலங்கையை வந்தடைந்தது
தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்காக அனுப்பப்பட்ட சுமார் 3 பில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகள் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளன.
இதனைத் இந்திய உயர்ஸ்தானிகரகம் தமது உத்தியோகபூர்வ டுவிட்டரில் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட குறித்த கப்பல் இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இக்கப்பலை வரவேற்கும் நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள், மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
From the people of #India to the people of #SriLanka!!! High Commissioner,Hon'ble Ministers @Keheliya_R, Nalin Fernando, MPs, various dignitaries and officials welcomed a large humanitarian consignment worth more than SLR 3 billion from #Tuticorn today. (1/2) pic.twitter.com/pMOF8kJppx
— India in Sri Lanka (@IndiainSL) June 24, 2022
முன்னதாக இந்தியாவினால் வழங்கப்பட்ட முதல் தொகுதி மனிதாபிமான உதவிகள் கடந்த மே 18 ஆம் திகதி கிடைந்திருந்த நிலையில், இன்றைய தினம் இரண்டாம் கட்ட உதவிப் பொருட்கள் கிடைத்துள்ளன.
தமிழகத்திலிருந்து வருகைதந்துள்ள இக்கப்பலில் சுமார் 15,000 மெட்ரிக் தொன் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அவற்றில் அரிசி, பால்மா மற்றும் அத்தியாவசிய மருந்துகள் அடங்கியுள்ளதாக உயர்ஸ்தானிகராலம் தெரிவித்துள்ளது.
The 15,000 MT consignment consists of rice, milk powder and essential medicines. More to follow !!!(2/2) pic.twitter.com/2tdZ27HayS
— India in Sri Lanka (@IndiainSL) June 24, 2022
அத்துடன், இலங்கைக்கு இந்தியா வழங்கும் உதவிகள் தொடரும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.