ஞானசார தேரர் ஏன் கைது செய்யப்படவில்லை? ஜனாதிபதிக்கு சென்ற கடிதம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசர தேரரை கைது செய்யத் தவறியது குறித்து கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி அது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உயிர்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையம் ஞானசாரா தேரரையும் குண்டுவெடிப்புகளுக்கு காரணமானவர்களில் ஒருவராக அறிவித்ததாக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் ரிஷாத் மனைவி குறிப்பிட்டுள்ளார். எனினும், ஞானசார தேரர் மற்றும் அறிக்கையில் பெயரிடப்பட்ட ஏனையவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தனது கணவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபடவில்லை என்றும் , எனினும் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் "அவமானகரமான முறையில்" கைது செய்யப்பட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், தனது கணவரை அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் தனது கணவர் மற்றும் அவரது சகோதரர் இருவரும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.
ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் ஏப்ரல் 24 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மேலும் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர், அஜித் ரோஹான தெரிவித்தார்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமான தற்கொலை குண்டுவீச்சாளர்களுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.