குழந்தைகளை தண்ணீரில் விடுங்கள்; விசேட வைத்தியர் அறிவுறுத்து!
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் மருத்துவ சிகிச்சையை நாடும் போக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினைத் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு காய்ச்சலால் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளதால், அதிகளவில் தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர்கள் குளிப்பதைக் கட்டுப்படுத்துவதால் வியர்வை கொப்புளங்கள் அதிகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். எனவே இருமல், சளி எதுவாக இருந்தாலும் குழந்தைகளைக் குளிப்பாட்டுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் குறிப்பாக, குழந்தைகளுக்கு தண்ணீரில் விளையாட அதிக நேரம் கொடுக்குமாறும் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.