அந்தஸ்தைப் பாராது சட்டம் பாயும்; அதுவே NPP இன் நோக்கம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகள் என எந்த அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் சட்டம் அமல்படுத்தப்படுவதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
குற்றம் செய்திருந்தால், அவர்களை நீதியின் முன் நிறுத்த நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம். சட்டத்தை அமல்படுத்துவது அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு குற்றம் நிகழும்போது, பாதிக்கப்பட்டவர்கள் மீது சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். அதுதான் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நோக்கம் என கூறிய பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் , பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதியை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் கூறினார்.