ரணில் கைதால் பீதியில் முன்னாள் அமைச்சர்கள்; அதிரடி காட்டும் அனுர அரசாங்கம்
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் அமைச்சர்கள் சிலர், ஆணைக்குழுவுக்கு அதிரடியாக படையெடுத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
முன்னாள் அமைச்சர்களின் பிரசன்னத்தால் , குற்றப் புலனாய்வுத் துறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனிப்பட்ட பயணத்திற்கு அரச நிதி செலவு
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று (22) காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குறம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில் , ரணிலின் கைது முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி ஒருவர் குற்றப்புலனாய்வு திணைகளத்தால் கைது செய்யப்படுவது இலங்கை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
ஜனாதிபதி அனுர குமார தலமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் அரசியல்வாதிகளின் ஊழல்கள் குறித்த விசாரனைகளில் பலர் சிக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
ரணில் விக்ரமசிங்க சிஐடி இல் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது; தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு
ரணில் கைதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ; இலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதி!