கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்... நபரொருவருக்கு நேர்ந்த சோகம்!
குருநாகல் பகுதியில் பாதெனிய - அநுராதபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (26-08-2024) இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அநுராதபுரத்தில் இருந்து பாதெனிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் 41 வயதுடைய நபரொருவரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரது சடலம் குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.