குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்
குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி நாம் இப்பதிவில் காணலாம்.
ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 14 ஆம் திகதி காலை 11:20 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். தற்போது ரிஷப ராசியில் உள்ள அவர் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
கடகம்
மிதுனத்தில் குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்களுக்கு பழைய முதலீடுகள் லாபகரமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும். இதன் காரணமாக அவர்கள் தங்கள் கடனை எளிதாக திருப்பிச் செலுத்துவார்கள். ஆரோக்கியம் மேம்படும்
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு மே 14 ஆம் தேதிக்குப் பிறகு மகிழ்ச்சி மழையாய் பொழியும். குருவின் அருளால், மாணவர்களின் அறிவுத்திறன் வளரும். அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது. பெரிய திட்டங்களிலிருந்து தொழிலதிபர்கள் பெரும் லாபம் ஈட்ட வாய்ப்பு உள்ளது.
தனுசு
குரு பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். பண வரவு அதிகமாகும். உங்கள் வாழ்க்கையில் புதிய சாதனைகளை செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும்.
மீனம்
குரு பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும். அவர்களது ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், குடும்ப உறுப்பினர்களிடையே நிலவும் பிரிவினை நீங்கும். தகவல் தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல், சுகாதாரம், ஊடகம், மேலாண்மை மற்றும் கல்வித் துறைகளுடன் தொடர்புடையவர்களின் வருமானம் அதிகரிக்கும். சிறு வணிகர்களின் வணிகத்தில் வளர்ச்சி ஏற்படும்.