கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி: அத்துமீறி நுழைந்த இராணுவப் புலனாய்வாளர்கள்!
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி முதலாம் நாள் அகழ்வாய்வுப்பணிகள் இன்றைய தினம் செப்டெம்பர் (06-09-2023) இடம்பெற்றிருந்தது.
முதலாம் நாள் அகழ்வாய்வுப் பணிகள் முடிவுறுத்தப்பட்டு அகழ்வாய்விற்கென வருகைதந்த அனைத்துத் தரப்பினரும் வெளியேறி, குறித்த பகுதி பொலிஸாரின் ஆளுகையின் கீழ் வந்ததன் பின்னர், மனிதப் புதைகுழி வளாகத்திற்குள் நுழைந்த இராணுவப் புலனாய்வாளர்கள் குறித்த பகுதியை புகைப்படம் எடுத்துள்ளனர்.
இதேவேளை, ஏற்கனவே இந்த கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையின்போது குறித்த பகுதியில் புலனாய்வளார்களின் அச்சுறுத்தல் நிலைமை தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
அகழ்வாய்வின் முதலாம் நாளே இவ்வாறு, பொலிஸ் பாதுகாப்பின் மத்தியிலும் புலனாய்வாளர்களின் அத்துமீறல் செயற்பாடு பதிவாகியிருப்பது, இந்த அகழ்வய்வு தொடர்பிலும், பொலிஸாரின் செயற்பாடு தொடர்பிலும் மக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.