பிரிட்டனின் நாளேடுகளில் தலைப்புசெய்தியான மன்னர் சார்ல்ஸ் ; தந்தைய காணச்செல்லும் ஹாரி!
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள பிரிட்டனின் நாளேடுகள் அது குறித்த தகவல்களை அதிர்ச்சியுடன் முதல் பக்கத்தில் பிரசுரித்துள்ளன.
பிரித்தானி ய மன்னர் சார்ல்ஸ் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சி தரும் விடயம் என தெரிவித்துள்ள மிரர், சமீபத்தில் அவர் செய்துகொண்ட புரொஸ்டிரேட் சத்திரசிகிச்சையின்போதே அவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஹரி பிரிட்டனிற்கு செல்வார்
அதேசமயம் சார்ல்ஸ் தனது சிகிச்சைவெற்றியளிக்கும் என்பது குறித்துமுழுமையான நம்பிக்கையுடன் இருக்கின்றார் என பக்கிங்காம் அரண்மணையை மேற்கோள்காட்டி த டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்தவாரம் தனது நிலை குறித்து அறிந்த மன்னர் சார்ல்ஸ் , பிள்ளைகள் சகோதரங்களை தொடர்புகொண்டார் என தெரிவித்துள்ள டைம்ஸ் நீண்டகாலத்திற்கு சார்ல்ஸ் பொதுநிகழ்வுகளில் கலந்துகொள்ளமாட்டார் எனவும் தெரிவித்துள்ளது.
தந்தையை பார்ப்பதற்காக ஹரி பிரிட்டனிற்கு செல்வார் என எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ள அதேவேளை .தந்தையுடன் அவர் பேசியுள்ளார் எனவும் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
மன்னர் சிகிச்சை காரணமாக பொதுநிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாது எனினும் மன்னர் என்ற அரசமைப்பு பணியைஅவர் தொடர்ந்தும் முன்னெடுப்பார் என கார்டியன் தெரிவித்துள்ளது.
தந்தை சிகிச்சைகளைமுன்னெடுக்கும்போது இளவரசர் வில்லியம் அரசகடமைகளில் அதிகளவு கவனத்தை செலுத்துவார் என தெரிவித்துள்ள த ஐ , தான் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து மன்னர் சார்ல்ஸ் எதனையும் மறைக்காமல் வெளிப்படை தன்மையை பேணியமையை மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
அதேசமயம் சார்ல்ஸின் இந்த அறிவிப்பு பலர் தங்களை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என கருதும் நிலையை ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என ஐ தெரிவித்துள்ளது.