கிளிநொச்சியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து: தீக்கிரையான தும்புத் தொழிற்சாலை!
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகாவில் சக்திஅக்றோ தும்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் தொழிற்சாலை எரிந்து முற்றிலும் சேதமாகியுள்ளன.
இச் சம்பவம் இன்றைய தினம் (08-09-2023) நண்பகல் வேளை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தின் போது தும்புத் தொழிற்சாலை தீக்கிரையாகியுள்ளதுடன், தொழிற்சாலை வளாகத்திலுள்ள தென்னை மரங்களும், அருகிலுள்ள காணிகளில் உள்ள தென்னை மரங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர், இராணுவத்தினர், கிராம சேவகர், கிராம மக்கள் ஆகியோரின் துணையுடன் தற்காலிகமாக குறித்த தீ அனர்த்தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மேலும், தீ கிராம குடியிருப்புகளுக்கு பரவாத வகையில் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருப்பினும், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.