தமிழர் பகுதியில் நடந்த பயங்கர சம்பவம்... ஒருவருக்கு நேர்ந்த நிலை!
கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (22-06-2024) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வேகமாக பயணித்த வாகனத்தில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை மீறி கப்ரக வாகனம், வீதி அருகில் உள்ள இலங்கை தொலைத் தொடர்பு வலையமைப்புகளை மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் இரு தொலைதொடர்பு தூண்கள் சேதமடைந்ததோடு, வலையமைப்பு வயர்களும் சேதமாகப்பட்டமையினால் அவ் வீதியூடாக செல்கின்ற வலையமைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.