கட்டிப்புடி வைத்தியத்தில் இவ்வுளவு நன்மை இருக்கிறதா?
மிகவும் எளிமையான இந்த கட்டிப்புடி வைத்தியம் நமக்கு என்ன மாதிரியான ஆரோக்கியத்தை தருகிறது என்பதை ஒவ்வொன்றாக இப்போது பார்ப்போம்.
ஒருவர் நம்மை கட்டிப்புடிக்கும் போது அன்பையும், நேசத்தையும், ப்ரியத்தையும் உணர்கிறோம். ஆனால் இப்படி ஒருவரை ஒருவர் அன்போடு கட்டிப்புடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது

இந்த கட்டிப்புடி வைத்தியம் நமக்கு உடலளவிலும், மனதளவிலும் பல நன்மைகளை தரக்கூடியது. மனிதர்கள் என்றில்லை, நமக்குப் பிடித்தமான செல்லப் பிராணிகள் அல்லது போர்வை, தலையணைகளை கட்டிப்புடிப்பது கூட உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்தில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த கட்டிப்புடி வைத்தியம் நமக்கு என்ன மாதிரியான ஆரோக்கியத்தை தருகிறது என்பதை ஒவ்வொன்றாக இப்போது பார்ப்போம்.

மன அழுத்தம் குறைகிறது
எந்தவிதமான மன அழுத்தங்களையும் குறைக்கும் சக்தி கட்டிப்புடி வைத்தியத்திற்கு இருக்கிறது. இதன் மூலம் நம்முடைய மனநலன் மேம்படுகிறது. சந்தோஷமான உணர்வு அதிகரிக்கிறது. ஒருவேளை நீங்கள் மன அழுத்தத்தோடு இருந்தால், இந்த கட்டிப்புடி வைத்தியத்தை ஒருமுறை முயற்சி செய்து பாருங்களேன்

இதய நலன் மேம்படும்
நமக்கு பிடித்தமானவரை கட்டிப்புடிக்கும் போது நம்முடைய உடல் ஆக்ஸிடோசினை வெளியேற்றி கார்டிசால் அளவை குறைக்கிறது. இதன் மூலம் நம்முடைய இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

நல்ல தூக்கம்
கட்டிப்புடி வைத்தியம் ஒருவருக்கு பாதுகாப்பு மற்றும் நிம்மதியை தருவதால் இரவில் நமக்கு நல்ல தூக்கம் வருகிறது. இனிமேல் தூக்கம் வரவில்லை என்றால் உங்கள் இணையை கட்டிப்புடித்துக் கொள்ளுங்கள்.

உடல் வலியை குறைக்கிறது
உங்களுக்கு மோசமான காயமோ அல்லது உடல் வலியோ இருந்தால், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அவர்களின் தொடுகை உங்கள் வலியை குறைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்
கட்டிப்புடி வைத்தியத்தை அடிக்கடி பின்பற்றி வந்தால் சளி, காய்ச்சல் மற்றும் பிற வைரல் நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
