நட்சத்திர விடுதியில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: இளைஞனுக்கு நேர்ந்த சோகம்
நட்சத்திர விடுதியில் குளிரூட்டிக்கான வாயு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குறித்த வெடிப்பு சம்பவம் கண்டி – இரண்டாவது ராஜசிங்க மாவத்தையிலுள்ள விடுதியில் இன்று (04-01-2022) குளிரூட்டிக்கான வாயு திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த தருணத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தில் தீ காயங்களுக்கு உள்ளான இளைஞன், பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இச் சம்பவத்தில் குளிரூட்டி வாயு திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், பழுதுபார்த்த பராமரிப்பு ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.