கண்டி வதை முகாமிலிருந்த இளைஞர்கள் பெட்ரோலை ஊற்றி எரிக்கப்பட்டனர்!

Sri Lanka Army Sri Lanka Police Kandy Sri Lanka
By Sulokshi Apr 08, 2025 02:30 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  1988-89ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டி பாடசாலையொன்றில் இயங்கிய வதை முகாமிலிருந்து இளைஞர்களை டிரக்கில் கொண்டு சென்று வழியில் அவர்களை கீழே தள்ளிவிட்டு அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து பெட்ரோலை ஊற்றி கொலை செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இதனை காணாமல்போனவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் செயலாளர் எம்சி இக்பால் தெரிவிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

கண்டி வதை முகாமிலிருந்த இளைஞர்கள் பெட்ரோலை ஊற்றி எரிக்கப்பட்டனர்! | Kandy School Concentration Camp

எம்சி இக்பால் தெரிவிக்கும் வீடியோ

இந்நிலையில் தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை நீதிக்கான திட்டம் உட்பட பல சர்வதேச அமைப்புகளும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். எம்சிஎம் இக்பால் இந்த வீடியோவில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

எனது மனதில் நினைவில் இருக்கும் விடயங்களில் ஒன்று கண்டியின் பாடசாலையொன்றில் காணப்பட்ட வதை முகாம் பற்றியதாகவும். பல இளைஞர்கள் அங்கு சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

அர்ச்சுனா எம்பிக்கு சபையில் ஏற்பட்ட சங்கடம்!

அர்ச்சுனா எம்பிக்கு சபையில் ஏற்பட்ட சங்கடம்!

ஒரு லொறி நிறைய பிரம்புகள் அந்த கல்லூரியில் உள்ள வதை முகாமிற்கு கொண்டு செல்லப்படுவதை பார்த்தவர்கள் எமக்கு சாட்சியமளித்திருந்தனர்.இளைஞர்கள் மாணவர்களிற்கு அடித்து சித்திரவதை செய்வதற்காக அதனை பயன்படுத்தியிருக்கவேண்டும்.

தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களை பேசச்செய்வதற்காக அவர்களிற்கு அடிப்பார்கள் அதன்பிறகும் அவர்கள் பேசாவிட்டால் பிரம்பால் அடிப்பார்கள். ஒவ்வொரு நாள் மாலையிலும் சித்திரவதை செய்யப்பட்டவர்களை டிரக் ஒன்றில் ஏற்றி வேறு எங்கோ கொண்டு செல்வார்கள்.

கருவை கலைக்க நினைத்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

கருவை கலைக்க நினைத்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

அவர்களை வேறு முகாமிற்கு கொண்டு செல்வதாக தெரிவிப்பார்கள். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட ஒருவர் வழியில் என்ன நடந்தது என எங்களிற்கு தெரிவித்தார். '

அவர்கள் எங்களின் கைகளை கட்டி லொறியில் ஏற்றினார்கள். தனிமையான இடத்தில் செல்லும்போது அந்த டிரக்கிலிருந்து ஒவ்வொருவராக தள்ளிவிடுவார்கள். பின்னால் இரண்டு வாகனங்கள் வரும் ஒன்றில் ஆயுதமேந்திய பொலிஸார் காணப்படுவார்கள் மற்றையதில் பெட்ரோலுடன் பொலிஸார் காணப்படுவார்கள்.

யாழ் யுவதியின் செயலால் மனமுடைந்த பிரான்ஸ் மாப்பிள்ளை!

யாழ் யுவதியின் செயலால் மனமுடைந்த பிரான்ஸ் மாப்பிள்ளை!

டிரக்கிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டவர் தப்பியோட முயலும்போது பின்னால் வரும் வாகனத்திலிருக்கும் பொலிஸார் அவர்கள் மீதுதுப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபடுவார்கள். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் துடிதுடித்துக்கொண்டிருக்கும் போது பின்னால் வரும் வாகனத்தில் உள்ளவர் பெட்ரோலை ஊற்றி தீ மூட்டுவார் இதனை போகும் வழியெல்லாம் தொடர்ந்து செய்வார்கள்.

இவ்வாறு ஒருவரை தள்ள முயன்றவேளை அவரை உயிருடன் எரிப்பதற்கு பெட்ரோல் இல்லாத நிலை காணப்பட்டது அதன் காரணமாகவே அவர் தப்பினார்.

இலங்கை விஜயத்தில் தமிழரை ஒதுக்கி வைத்த பிரதமர் மோடி; பௌத்தத்திற்கே முன்னுரிமை!

இலங்கை விஜயத்தில் தமிழரை ஒதுக்கி வைத்த பிரதமர் மோடி; பௌத்தத்திற்கே முன்னுரிமை!

அவரை முகாமிற்கு கொண்டு சென்றவர்கள் அவர் அதிஸ்டசாலி என்றார்கள் அவரை வேறு ஒரு நாள் அழைத்து வருவதே அவர்களின் நோக்கம். எனினும் அதிஸ்டவசமாக மற்றுமொரு நாள் அவருக்கு வரவில்லை அவர் அந்த வதை முகாமிலிருந்து தப்பினார் உயிர் பிழைத்தார்.

அவரே பின்னபு எங்களின் ஆணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளித்தார். இது கண்டியின் அனிவத்தை என்ற பகுதியில் இடம்பெற்றது.கண்டியில் அந்த பகுதியில் வீதிகள் இருள்மயமாக காணப்பட்டதாகவும்   குறிப்பிடப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம்

14 Nov, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், காஞ்சிபுரம், India

04 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Montreal, Canada

23 Oct, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

20 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US