நீதிபதி இளஞ்செழியனுக்கு அனுர அரசாங்கம் இழைத்த அநீதி; சிவில் சமூக ஆதங்கம்

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Sri Lankan Peoples Ilanseleyan
By Sulokshi Jan 22, 2025 02:30 PM GMT
Report

இலங்கையில்  தமிழ் நீதிபதிகளுள் சிறந்த  எடுத்துக்காட்டாக திகழ்கின்ற  நீதிபதி மாணிக்க வாசகர் - இளஞ்செழியனுக்கு ஜனாதிபதி  அனுரகுமார அரசாங்கம்  திட்டமிட்டு அநீதி இழைத்துள்ளதாக தீவக சிவில் சமூகம் குற்றம் சுமத்தியுள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வமைப்பின் சார்பில் கலந்துகொண்ட கருணாகரன் நாவலன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் ஆகியோர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் கருணாகரன் நாவலன் தெரிவிக்கையில்,

நீதிபதி இளஞ்செழியனுக்கு அனுர அரசாங்கம் இழைத்த அநீதி; சிவில் சமூக ஆதங்கம் | Judge Ilanchezhiyan By The Anura Gov Injustice

 மக்களின் நன்மதிப்பை பெற்ற நீதிபதி

இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவரும் தற்துணிவாக அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தீர்ப்புக்களை வழங்கி நீதியை எதிர்பார்த்த மக்களை ஆற்றுப்படுத்திய நீதிபதி இளஞ்செழியனுக்கு பாரபட்சமான வகையில் இந்த அரசு பதவி உயர்வு வழங்காமல் பழிவாங்கியுள்ளது.

சுவிட்சலாந்தில் பிரபல இந்து ஆலயத்தில் திடீர் தீ விபத்து; பக்தர்கள் கவலை

சுவிட்சலாந்தில் பிரபல இந்து ஆலயத்தில் திடீர் தீ விபத்து; பக்தர்கள் கவலை

இதை ஏற்க முடியாது. நீதிபதி இளஞ்செழியன் தனது 27 ஆண்டுகால நீதித்துறையின் பதவிக் காலத்தில் பல்வேறு தீர்ப்புகளை அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் வழங்கியதால் இலங்கை மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்தார்.

நீதிபதி இளஞ்செழியனுக்கு அனுர அரசாங்கம் இழைத்த அநீதி; சிவில் சமூக ஆதங்கம் | Judge Ilanchezhiyan By The Anura Gov Injustice

ஆனால் அவருக்கான பதவிகள் அந்தந்த காலகட்டத்தில் வழங்கப்படாது அரசுகளால் திட்டமிட்ட வகையில் தட்டிக்களிக்கப்பட்டு வந்தது.

இதன் உச்சமாக தற்போது அனுர அரசும் அனைத்து தகுதிகள் இருந்தும் திட்டமிட்டு அவரது பதவி உயர்வை தடுத்து ஓய்வு நிலைக்கு தள்ள முயற்சித்துள்ளது. இதை எமது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

 பதவி உயர்வை தடுத்து ஓய்வு

அந்த வகையில் அரசானது பழிவாங்கலை கைவிட்டு அவருக்கு பதவி உயர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். பதவி உயர்வுக்கான சூழலை அரசு உருவாக்காவிட்டால் சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து வீதிக்கு இறங்கி போராடும் நிலை வரும் என தெரிவித்தார்.

நான் அவன் இல்லை; மறுப்பு தெரிவித்த அருச்சுனா எம்பி!

நான் அவன் இல்லை; மறுப்பு தெரிவித்த அருச்சுனா எம்பி!

அதனை தொடர்ந்து, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் JVP செய்த செயற்பாடுகள் அனைத்தையும் எமது மக்கள் நன்கு அறிவார்கள்.

அதேநேரம் அவர்கள் தமிழ் மக்களை ஒரு பொருட்டாக கண்டுகொள்ள விரும்புவதில்லை. அவ்வாறான தரப்பினர் இன்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி கிளீன் சிறீலங்கா என்று கூறி தமிழ் மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகிறது.

நீதிபதி இளஞ்செழியனுக்கு அனுர அரசாங்கம் இழைத்த அநீதி; சிவில் சமூக ஆதங்கம் | Judge Ilanchezhiyan By The Anura Gov Injustice

மறைமுக பழிவாங்கல் போக்குடனும் செயற்படுவதாக மக்கள் கூறுவதை காண முடிகிறது. ஆனால் ஆட்சியை கைப்பற்ற அனுர தரப்பு மக்களுக்கு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

இதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் தென்பகுதியைப் போன்று தமிழ் மக்களையும் அவரவர் தகுதிகளுக்கேற்ப பதவிநிலைகளில் பாரபட்சம் பாராது நியமிக்க வேண்டும் எனவும் கனகரத்தினம் விந்தன் தெரிவித்தார். 

யாழில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவம்; 20 பேரை தேடும் பொலிஸார்

யாழில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவம்; 20 பேரை தேடும் பொலிஸார்

13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US