யாழில் அமைச்சரை சந்திக்க கறுப்புப் பட்டியுடன் சென்ற ஊடகவியலாளர்கள்
யாழ்.மாவட்ட செயலகத்தில் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கும் ஊடகவியலாளருக்கு இடையில் நேற்று கல்லந்துரையாடன் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சென்றனர்.
வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதியிலுள்ள ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, கொலை செய்யப்பட்டமை மற்றும் தாக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை நீதி கிடைக்காமையினை எடுத்துக் காட்டும் முகமாகவே அவர்கள் கறுப்புப் பட்டி அணிந்து சென்றிருந்தனர்.
ஊடகவிலாளர்கள் கறுப்பு பட்டி அணிந்திருந்ததை அவதானித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும , நானும் ஒரு ஊடகவியலாளனாக மூன்று பத்திரிகைகளில் கடமையாற்றியதாக குறிப்பிட்டு ஊடகவியலாளர்களின் ஜனநாயகக் கோரிக்கைக்கு தான் மதிப்பளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.




