யாழில் சுயாதீன ஊடகவியலாளர் பிரகாஸின் பூதவுடல் தகனம்!
யாழில் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்திருந்த சுயாதீன ஊடகவியலாளர் பிரகாஸின் பூதவுடல் இன்றைய தினம் தகனம் செய்யப்பட்டது.
கொடிகாமத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் பிரகாஸ் (வயது 26) கடந்த வாரம் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 02ஆம் திகதி உயிரிழந்திருந்தார். இதனையடுத்து சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக அவரது பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.
அத்துடன் அவரது அஸ்தி அல்லாரை புதிய செபமாலை அன்னை தேவாலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சுயாதீன ஊடகவியலாளரான, பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொண்டார்.
எனினும் அதனை பொருட்படுத்தாது அவர் முன்னேறி, ஊடகத் துறையில் தனக்கொன்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

