யாழ். கடல் எல்லை மீறல் ; நள்ளிரவு கண்காணிப்பில் சிக்கிய 3 இந்திய கடற்றொழிலாளர்கள்
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகே இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 3 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு, வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவினர் நெடுந்தீவுக்கு அருகில் உள்ள உள்ளூர் கடல் எல்லைக்குள் விசேட கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு இந்தியக் கடற்றொழில் படகுடன் அதிலிருந்த மூன்று (03) இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட இந்தியக் கடற்றொழில் படகு மற்றும் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மைலடி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.