யாழ் பல்கலையில் பட்டம்பெறவுள்ள விழிப்புலன் இழந்த மாணவர்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 14.03.2024 மற்றும் 15.03.2024 ஆகிய தினங்களில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ள நிலையில் விழிப்புலன் இழந்த மாணவர்கள் ஐவர் பட்டம்பெறவுள்ளனர்.
இந்நிலையில் முப்பத்தெட்டாவது பட்டமளிப்பு விழாவில் வாழ்வகத்தைச் சேர்ந்த ஐந்து விழிப்புல வலுவிழந்த மாணவர்கள் பட்டம்பெற உள்ளனர். ஸ்ரீதரன் யோகதாஸ் மொழிபெயர்ப்புக் கற்கை சிறப்புக்கலைமாணிப் பட்டத்தினை பெறவுள்ளார்.
சிறப்புக்கலைமாணிப் பட்டம்
அதோடு பொன்னம்பலம் தீபன், கலாமோகன் பிரகான் ஆகியோர் இந்துநாகரிக சிறப்புக்கலைமாணிப் பட்டத்தினையும் தங்கராசா லாவண்யா தொல்லியல் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தினையும் திருமதி பிரகான் வானுஜா பொதுக் கலைமாணிப் பட்டத்தினையும் பெற்றுக்கொள்ள உள்ளனர்.
கல்வி முன்னேற்றத்துக்குத் எதுவும் ஒரு தடையல்ல என்பதை இந்த மாணவர்கள் நிரூபித்துள்ள நிலையில் மாணவர்களுக்கு பாராட்டும் வாழ்த்துக்களௌம் குவிந்து வருகின்றன.