அடுத்த துணைவேந்தர் யார்? யாழ் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு மர்மநபர்கள் மிரட்டல்!
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனாமதேய அழைப்புக்கள்
பேரவையின் உறுப்பினர்கள் சிலருக்குத் தெரியாத அலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு மேற்கொள்ளப்பட்டு மிரட்டல் விடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாங்கள் அரச புலனாய்வுச் சேவையில் இருந்து அழைக்கிறோம். யார் துணைவேந்தராக வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ஏன் அவரை விரும்புகிறீர்கள்? நாங்கள் தான் இரகசிய அறிக்கை கொடுக்க வேண்டும். அதற்காகத் தான் கேட்கின்றோம் என்று மர்மநபர்கள் பேரவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை பல்கலை துணைவேந்தர் தெரிவுக்கான காலம் நெருங்கி வரும் நேரத்தில் அனாமதேய அழைப்புக்களால் பேரவை உறுப்பினர்கள் விசனமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.