யாழில் அடுத்தடுத்து 4 பிள்ளையார் சிலைகள் மாயம்! இதன் மர்மம் என்ன?
தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான யாழ்ப்பாணத்தில் அடுத்தடுத்து 4 பிள்ளையார் சிலைகள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் யாழ்.காங்கேசந்துறை-கெழுனு விகாரைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் கோவிலில் இருந்த சிலை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மகாஜனா பாடசாலைக்கு அருகிலுள்ள ஆலயத்திலிருந்து இரு பிள்ளையார் சிலைகளும் காணாமல் போயுள்ளன.
மேலும் பலாலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இருந்த ஒரு பிள்ளையார் சிலையும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.