யாழில் புத்தாண்டில் சகோதரர்கள் இருவருக்கு நேரந்த கதி; பெரும் சோகத்தில் குடும்பம்!
யாழ்ப்பாணத்தில் சித்திரைப் புத்தாண்டு சகோதரர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வாகனம் மோதியதில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மற்றைய சிறுவன் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்று காலை 8.45 மணியளவில் நாவலர் வீதி, கனகரத்தினம் மகா வித்தியாலயத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயரூபன் மதுசியன் (8) என்ற சிறுவன் உயிரிழந்த நிலையில் சகோதரனான 12 வயதுச் சிறுவன் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூத்த சகோதரன் துவிச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்ற நிலையில் பின்னிருக்கையிலிருந்த இளைய சகோதரரன் வீதியின் பக்கம் வீழ்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் சாரதியை வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும் யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார், மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், சிறுவனின் சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில்,பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது