பிரான்ஸில் காணாமல்போன யாழ் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டது உண்மையா?
பிரான்ஸில் யாழ்ப்பாணம் மல்லாகத்தை சேர்ந்த குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டு சடலம் குப்பை மேட்டில் வீசப்பட்டு நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த நபர் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் அவரது மனைவிக்கு அவர் பணிபுரியும் வீட்டின் தொலைபேசி இலக்கம் மற்றும் முகவரி வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த வாரம் தனது கணவரை தொலைபேசியில் அழைத்தபோது, சில நாட்களாக அவரைக் காணவில்லை என குறித்த வீட்டினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, காணாமல்போன கணவரை கண்டுபிடித்து தருமாறு பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளிடம் மனைவி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இவ்வாறான நிலையில் இது தொடர்பில் பொலிஸார் எந்த ஒரு உறுதியான தகவலையும் இதுவரையில் வெளியிடவில்லை.