யாழ் சுன்னாகம் குடும்பஸ்தர் கொலை; களத்தில் பொலிஸார்
யாழ்ப்பாணம் - சுன்னாகம் கந்தரோடை பகுதியில் கொலைச் சம்பவம் நடந்த பகுதியில் மல்லாகம் நீதவான், சுன்னாகம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் இன்று (31) விசாரணைகளை மேற்கொண்டனர்.
நேற்றைய தினம் (30)செவ்வாய்க்கிழமை கோழி வளர்ப்பால் இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அயலவர் கைது
சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , அயலவர்களான உறவினர்கள் இருவருக்கும் இடையில் கோழி வளர்ப்பினால் பிரச்சனைகள் நிலவி வந்துள்ளமை தெரியவந்தது.
வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது முற்றி கத்திக்குத்தில் முடிவடைந்ததில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் உயிரிழந்ததை அடுத்து, கொலை சந்தேகநபரான 57 வயதுடைய அயலவர் கைது செய்யப்பட்டள்ளார்.
மேலும் கைதான நபரை சுன்னாகம் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.