காசா மீது தொடர் குண்டுத் தாக்குதலை மேற்கொள்ளும் இஸ்ரேல்
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த 7-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல், காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இன்று 19-வது நாளாக தாக்குதல் நடந்து வருகிறது இதற்கிடையே காசா மீது இடைவிடாத தாக்குதல் நடாத்தப்படும் என்ற அறிவித்தலுக்கமைய தீவிரமான முறையில் வான்வழி தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 704 பேர் பலியானார்கள். என்றார். ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் மூலம் குண்டு மழை பொழிந்து வருகிறது.
நேற்று 400-க்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகளை தாக்கியதாகவும், ஏராளமான ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே காசாவின் சுகாதார அமைச்சகம் கூறும் போது இஸ்ரேலின் தாக்குதலில் காசா பகுதியில் 2360 குழந்தைகள் உட்பட 5791 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகி உள்ளன.
இடி பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதல்களால் காசாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் kசிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே மருத்துவமனையில் எரி பொருள் தீர்ந்து விட்டதால் காசாவில் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கியுள்ளன.
இதற்கிடையே எரி பொருள் தீர்ந்து விட்டதால் காசாவில் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கியுள்ளன. இதனால் சிகிச்சை பெறுபவர்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிக்கிறார்கள்.
இதனால் காசாவுக்குள் எரி பொருளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
அதே போல் காசாவில் தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.