பிக் பாஸ் நிகழ்ச்சியில் திருமண வாழ்க்கை குறித்து மறைத்த இசைவாணி....வெளியான உண்மைக் காரணம்
தமிழில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
முதல் வாரத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்கான தங்கள் கடந்து வந்த பாதையில் அனைவரும் தங்களுது அனுபவங்களி பகிர்ந்தனர். அதன்படி கானா பாடகி இசைவாணியும் தன்னைபற்றிக் கூறினார். ஆனால் அவர் அவரது திருமண வாழ்க்கையை குறித்து எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து அவரது தோழிகள் சிலர் பதிவொன்றை போட்டுள்ளனர்.
அதில் அவர்கள் தெரிவித்ததாவது,
இசைவாணிக்கும், டிரம்ஸ் குழுவை சேர்ந்த சதிஷ் என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு மிகவும் அவசரமாக திருமணம் நடத்தப்பட்டது. தொடக்கத்தில் இருவரும் புதுமண தம்பதிகள் எவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பார்களோ அதுபோன்று இருந்தனர். சில நாட்களுக்குப் பிறகு இருவர்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
இதனால் இசைவாணி மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானர்.அவரை நாங்கள் தான் அந்த மன அழுத்தத்திலிருந்து மீட்டோம்.
மேலும் அந்த திருமண வாழ்க்கையை பற்றி மீண்டும் பேசி மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டாம் என எண்ணி கூட இசைவாணி திருமண வாழ்க்கைப்பற்றி பேசாமல் இருந்திருக்கலாம்.
இல்லையெனில் அவர் கூறியதை பிக் பாஸ் எடிட் கூட செய்திருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.