புதிய பிரதமராகிறாரா தினேஷ் குணவர்தன?
புதிதாக அமைக்கப்பட்ட காபந்து அமைச்சரவையில் தற்போது நிதியமைச்சராக உள்ள பசில் ராஜபக்ஷ பதவியில் இருந்து நீக்கப்படுவார். இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வசதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளார்.
தற்போது அவர் பதவி விலகியதாக தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டை ஸ்திரப்படுத்த பதவி விலக முடிவு செய்தார். 11 கட்சிகளின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தை உடனடியாக ஸ்தாபிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். இதேவேளை, புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
எனினும், இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.
இதேவேளை, பசில் ராஜபக்சவிற்கு பதிலாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஹர்ஷ டி சில்வாவின் பெயர் நிதியமைச்சராக முன்மொழியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.