மன்னாரில் ஆளில்லா விமான செயல்பாடுகள் தொடர்பில் விசாரணை
மன்னார், வங்காலை சரணாலயத்தை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அனுமதியற்ற ஆளில்லா விமானச் செயற்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் விதிகளின்படி அங்கீகரிக்கப்படாத ஆளில்லா விமானச் செயல்பாடுகள் சட்டத்தால் தண்டிக்கப்படும் குற்றமாகும்.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இலங்கைக்குள் நடத்தப்படும் அனைத்து ஆளில்லா விமான நடவடிக்கைகளுக்கும் இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையிடமிருந்து அனுமதி பெறப்பட வேண்டும்.