பண்டாரகம துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்
பண்டாரகம பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர், முன்னாள் சிறைக்காவலர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பண்டாரகம - பொல்கொட பாலத்திற்கு அருகில் இன்று மாலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், காரில் பயணித்த ஒருவர் மீது T-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காரில் இருந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
டி-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், உயிரிழந்தவர் மீது 20க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.