புடினை சினம்கொள்ளவைத்த வாக்னர் கூலிப்படை தலைவன் தொடர்பில் பகீர் தகவல்கள்!
ரஷியாவில் பரபரப்பை ஏற்படுத்திய வாக்னர் கூலிப்படையானது தற்போது கலைக்கப்பட்டு, வாக்னர் கூலிப்படை தலைவன் பிரிகோஜின் நாடு கடத்தப்பட்ட நிலையில் அவர் தொடர்பில் அபல்ரும் அறியாத தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆம்,,,வாக்னர் கூலிப்படை தலைவன் பிரிகோஜின் சொத்துக்கள் மற்றும் சொகுசு வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்கள் அம்பலமாகியுள்ளது. பிரிகோஜினுக்கு சொந்தமாக சொகுசு விமானம் ஒன்றும், ஆடம்பர படகு மற்றும் வைர சுரங்கமும் இருப்பதாக கூறப்படுகிறது.
ரஷியா குற்றவாளிகள்
இந்த வாக்னர் என்ற பெயரிலான அமைப்பு, ரஷியாவில் உள்ள சிறைகளில் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டு, அடைக்கப்பட்டவர்களை பணிக்கு அமர்த்தி ஒரு கூலிப்படையாக இயங்கி வருகிறது.
அந்த அமைப்பு தொடக்கத்தில் ரஷிய ஆதரவு படையாக செயல்பட்டு, உக்ரைனில் தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில், வாக்னர் அமைப்பினர் திடீரென ரஷியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை திரும்பியது ரஷியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1990-ம் ஆண்டில் இருந்து புதின் மற்றும் பிரிகோஜின் இருவரும் ஒருவரையொருவர் நன்றாக அறிந்தவர்களாக இருந்தனர்.
அதன்பின், ரஷிய அரசிடம் இருந்து ஓட்டலுக்கான ஒப்பந்தங்களை பெரிய அளவில் பெற்று பிரிகோஜின் பெரிய செல்வந்தரானார்.
புடினுடன் கூட்டு
கிழக்கு உக்ரைனில் தொன்பாஸ் நகரில் 2014-ம் ஆண்டில் ரஷிய ஆதரவு பெற்ற பிரிவினைவாத இயக்க செயல்பாட்டுக்கு பின்னர், பிரிகோஜின் கூலிப்படை தலைவராக மாறினார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவின் வாக்னர் எனப்படும் கூலிப்படை அமைப்பு ரஷியாவுடன் இணைந்து உக்ரைன் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. உண்மையில் முறைகேடான அரசாங்க ஒப்பந்தங்கள் மற்றும் இயற்கை வளங்களில் இருந்து தான் பிரிகோஜின் பணம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, வாக்னர் கூலிப்படை செயல்படும் நாடுகளில் இருந்து வைரம், தங்கம், எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை கொள்ளையடிப்பதே இவர்களின் இன்னொரு தொழில் என்றும் கூறப்படுகிறது.
பெரும் சொத்துக்கள்
பிரிகோஜினின் தனிப்பட்ட சொத்து மட்டும் 2 பில்லியன் பவுண்டுகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதோடு , கடந்த ஆண்டு மட்டும் ரஷிய அரசாங்கத்திடம் இருந்து சுமார் 1.6 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஒப்பந்தங்களை வாக்னர் கூலிப்படை பெற்றுள்ளதாக விளாடிமிர் புதினே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மேலும், செயின்ட் பீட்டர்ஸ்ப்அர்க் நகரில் அமைந்துள்ள வாக்னர் கூலிப்படை தலைமையகத்தில் நடத்த்ப்பட்ட சோதனையில் 38 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அமெரிக்க டாலர் உட்பட பல்வேறு நாடுகளின் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் தங்கக் குவியல், போலி பாஸ்போர்ட்டுகள் என பல்வேறு ஆவணங்களையும் மீட்டுள்ளனர்.
இதனிடையே, வாக்னர் கூலிப்படைக்கு தொடர்புடைய அல்லது நிதியுதவி அளித்த 4 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.