கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்!
கொழும்பு, வார்ட் பிளேஸில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றையதினம் (23-07-2024) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஊழலை அம்பலப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை... தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்!
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலின் படி, குருந்துவத்தை பொலிஸாரால் வார்ட் பிளேஸ் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினர் நடத்திய சோதனையில் குறித்த முச்சக்கரவண்டி மித்தெனிய பகுதியில் வசிப்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
விசாரணையில், முச்சக்கரவண்டியை தனது மைத்துனருக்கு வாடகைக்கு செலுத்த கொடுத்ததாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொலிஸாரால் நடாத்திய மேலதிக விசாரணைகளில், படுகொலை செய்யப்பட்டவர் கொடகவெல பகுதியைச் சேர்ந்த 33 வயதான சமிந்த குமார என தெரியவந்துள்ளது.
பகலில் அலுமினியம் தொடர்பான வேலையில் ஈடுபட்டு வந்த அவர், இரவில் வாடகை முச்சக்கரவண்டி ஓட்டுநராக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் அத்துருகிரிய பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் கொலைசெய்யப்பட்ட நபரின் மார்பிலும் கழுத்திலும் இரண்டு காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், பின் இருக்கைக்கு அருகில் அவரது சடலம் கிடந்ததால் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், முச்சக்கரவண்டியின் பக்கவாட்டு கண்ணாடி ஒன்றும் உடைந்து வீதியில் கிடந்துள்ளது.
இருப்பினும், கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை. அதன்படி, அப்பகுதியில் உள்ள சிசிரிவி கெமராக்களை பொலிஸார் சோதனை செய்து வருகின்றனர்.
பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கருவாத்தோட்டம் பொலிஸார் உட்பட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.