இண்டிகோ சரிவு;உதயமாகும் 3 புதிய விமான நிறுவனங்கள்
இந்தியாவில் 3 புதிய விமான நிறுவனங்கள் உதயமாகவுள்ளது. இந்திய விமான போக்குவரத்து துறையில் இண்டிகோ விமான நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் டிசம்பர் மாதத் தொடக்கத்தில், இந்த நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடியால், நாடு முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து அமைச்சக விதிமுறை தளர்வு
பின்னர் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விதிமுறைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இண்டிகோ விமான நிறுவன பிரச்னைக்கு இந்திய மத்திய அரசு தீர்வு கண்டது.
இந்நிலையில், விமானங்கள் சேவையை ஆரம்பிப்பதற்கு அல் அல் ஹிந்த் ஏர், ப்ளை எக்ஸ்பிரஸ் மற்றும் ஷாங்க் ஏர் ஆகிய 3 புதிய நிறுவனங்கள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

அல் ஹிந்த் ஏர் மற்றும் ப்ளை எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த வாரம் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே ஷங்க் ஏர் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷங்க் ஏர், 2026ல் விமான சேவைகளை ஆரம்பிபிக்கவுள்ளது.
03 விமான நிறுவனங்களிடம் இருந்தும் வழித்தடங்கள் மற்றும் பயன்படுத்தவிருக்கும் விமானம் குறித்து இந்திய மத்திய அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
அறிக்கையை சமர்பித்த பின்னர் விரைவில் இந்திய வானில் மூன்று புதிய விமான நிறுவனங்களும் தனது சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.