16 நாடுகளின் கடற்படை அதிகாரிகளுடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த இந்தியக் கடற்படைக் கப்பல்
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “சுனைனா” கப்பல் இன்று (15) வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
16 நாடுகளின் கடற்படை அதிகாரிகள்
இந்த வருகை, இந்திய கடற்படை மேற்கொண்டு வரும் நட்புறவுப் பாலங்களை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சுனைனா” கப்பலுடன் 16 நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு கடற்படை அதிகாரிகளும் இலங்கைக்கு வந்தடைந்துள்ளனர்.
அவர்களில் பங்களாதேஷ், இந்தோனேசியா, கென்யா, மலேசியா, மாலைத்தீவு, மொரிஷியஸ், மொசாம்பிக், மியன்மார், சிங்கப்பூர், சீஷெல்ஸ், தென்னாபிரிக்கா, தான்சானியா, தாய்லாந்து, திமோர் லெஸ்டே மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பன்னாட்டு கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த வருகை முக்கியத்துவம் பெறுவதாக கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


