இலங்கை மீனவர்களை துரத்தி வந்த இந்திய மீனவர்கள்!
Indian fishermen
India
Sri Lanka Fisherman
By Sundaresan
இந்திய நாகப்பட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த 4 மீனவர்களின் தொழிலை (வலை) இலங்கை மீனவர்கள் வெட்டி எடுத்து கொண்டு வந்ததால், அவர்களை துரத்தி கொண்டு வந்ததில் வல்வெட்டித்துறை வாடி ஒழுங்கை கடற்கரையில் வந்து இறங்கி உள்ளனர்.
இதனால் வல்வெட்டித்துறை பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
நாங்கள் எந்தவொரு சட்டவிரோதமான செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை, எங்களின் வலையை இலங்கை மீனவர்கள் வெட்டி எடுத்துக் கொண்டு வந்ததாலேயே அவர்களை துரத்தி வந்தோம் என குறித்த மீனவர்கள் பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US