கார்த்திகை பூச் சூடிய இந்திய துணைத் தூதுவர்; சர்ச்சையாக்கிய ஊடகங்கள்; தூதரகம் விளக்கம்

Jaffna Indian Deputy Ambassador Embassy Description
By Sulokshi Nov 24, 2021 11:39 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் , விடுதலைப் புலிகளின் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றதாக அரச ஆதரவு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு, இந்திய துணைத் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் கிட்டு பூங்காவில் தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஏற்பாடு செய்த ‘கார்த்திகை வாசம்’ மலர்த்தோட்டத்தை ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் கடந்த சனிக்கிழமை திறந்து வைத்தார்.

இதன்போது அவருக்கு கார்த்திகைப்பூ அணிவிக்கப்பட்டது. வடமாகாண மரநடுகை வாரத்தை முன்னிட்டு, கடந்த சில வருடங்களாக தமிழ் தேசிய பசுமை இயக்கம், வருடாந்தம் இந்த நிகழ்வை நடத்தி வருகிறது. அதோடு அங்கு மலர்க்கண்காட்சியும், விற்பனையும் நடந்து வருவதுடன் மாணவர்களிற்கு இலவச மரக்கன்றுகளையும் வழங்கி வருகிறது.

எனினும், தமிழ், சிங்கள அரச ஆதரவு ஊடகங்கள் இந்த விடயத்தை பெரும் சர்ச்சையாக்கி இருந்தன. அது விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வு என்றும், அந்த நிகழ்வில் , இந்திய துணைத்தூதரும் கலந்து கொண்டதாகவும் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய ஊடகச் செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் அறிக்கையொன்றை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது. “2021 நவம்பர் 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் இந்திய துணைத்தூதர் பசுமைக் கண்காட்சியை ஆரம்பித்து, தாவர மரக்கன்றுகளை விநியோகித்தது தொடர்பாக பல தவறான ஊடகச் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

அவருக்கு வந்த அழைப்பின் பேரில் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அந் நிகழ்வில் கலந்து கொண்டார். அத்தகைய பங்கேற்பு எந்த வகையிலும் ஏற்பாட்டாளர்கள் அல்லது அவர்களின் செயல்களுடன் தொடர்புபடுத்த முடியாது. இது பற்றி அவருக்கு முன் தகவல் இல்லை, ”என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் வறண்ட வலயங்களில் மலரும் கார்த்திகை பூ, கார்த்திகை மாதங்களில் மலர்வது. வடக்கு, கிழக்கில் உள்ளிட்ட பல இடங்களில் அப்பூ மலரும் எனப்து அனைவரும் அறித்த விடயம்.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் கார்த்திகை மலரை தமது அடையாளங்களில் ஒன்றாக கொண்டிருந்தார்கள் என்ற ஒரே காரணத்தினால், தமிழ் நிலத்தின் தனித்துவமான மலரையும் பயங்கரவாத பட்டியலில் இணைக்கும் முயற்சியில் அரச ஆதரவு ஊடகங்கள் தீவிர முயற்சி மேற்கொள்வது ஆபத்தானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Gallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US