யாழில் தரையிறங்க முடியாது திரும்பிய இந்தியா விமானம் ; அமெரிக்க விமானம் தரையிறங்கியது
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் , சென்னையில் இருந்து வந்த விமானம் யாழ்ப் சர்வதேச விமான நிலையம் வந்த இந்தியா விமானம் தரையிறங்க முடியாது மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது .
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் சீரற்ற கால நிலை நிலவி வருகிறது.

பொதிகளை ஏற்றி வரும் அமெரிக்க விமானம்
இந்நிலையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணத்தை அண்மித்த நிலையில் வானில் நிலவிய கடுமையான மோக மூட்டத்தால் , சென்னைக்கு மீள திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை , கொழும்பில் இருந்து வடமாகாணத்திற்கான நிவாரண பொதிகளை ஏற்றி வரும் அமெரிக்க விமானம் இன்றைய தினமும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து நிவாரண பொருட்களை கையளித்து சென்றமை குறிப்பிடத்தக்கது.