மட்டக்களப்பில் மர்ம குழுவால் நடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ; அழிக்கப்பட்ட ஆதாரங்கள்
மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் அமைந்துள்ள பிரபல சில்லறை விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அடையாளம் தெரியாத நபர்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு முறைப்பாடு
வியாபார நிலையத்தின் உரிமையாளர் வழங்கிய தகவலின்படி, சுமார் 4.5 மில்லியன் ரூபாய் பணம், 5 பவுண் எடையுள்ள தங்க ஆபரணங்கள், கடையில் இருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் உபகரணங்கள்.
கடையினுள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்களை சேதமாக்கியுள்ளதுடன், பதிவுகள் அடங்கிய டிஜிட்டல் சேமிப்பு கருவியையும் திருட்டில் ஈடுபட்டவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பதற்காக, சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வேறு சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.