2000 ரூபாய் கொடுப்பனவு பெறாதவர்களுக்கு முக்கிய அறிவித்தல்
அரசாங்கத்தால் வழங்கப்படும் 2000 ரூபா கொடுப்பனவு பெறாத மக்கள் தாம் வசிக்கும் பிரதேசத்தின் கிராம சேவகர் ஊடாக கோரிக்கை விடுக்க முடியும் என உள்நாட்டு விவகார இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் வாழ்வாதாரத்தை இழந்த 7,27,339 குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் 2000 ரூபாய் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
18 மில்லியன் குடும்பங்களுக்கு இவ்வாறு உதவித்தொகை வழங்க தீர்மானித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் சுதேச இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் அலுவலகத்தின் ஊடாக வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்குக் கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த கொடுப்பனவை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் வழங்க வேண்டும் என அவர் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் கொடுப்பனவு பெறாத மக்கள் தாம் வசிக்கும் பிரதேசத்தின் கிராம சேவகர் ஊடாக கோரிக்கை விடுக்க முடியும் எனவும் உள்நாட்டு விவகார இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.