இலங்கையில் இன்று - நாளை மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் இன்று, நாளை, இரு தினங்களிலும் ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளது.
எனினும், நாட்டில் இலங்கையில் (11-08-2022) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது.
இன்று பௌர்ணமி தினம் என்பதால் இவ்வாறு மின்வெட்டை மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் (14-08-2022) நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படத்தப்படாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.