ஓய்வு பெறுவது தொடர்பில் 55 வயதை கடந்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
நாட்டில் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக நீடிக்கப்பட்டதனால் ஓய்வு பெற தீர்மானித்தவர்களுக்குள் குழப்பம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் எதிர்வரும் ஜனவரி முதல் 55 வயத்தினைக் கடந்தவர்கள் தங்களுக்கு விருப்பமாயின் ஓய்வு பெறலாம் என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தபோதே இதனை அவர் தெரிவித்தார்.
ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக நீடிப்பட்டதன் காரணமாக டிசம்பர் மாதம் இறுதியில் ஓய்வுபெற இருப்பவர்கள் தற்போது குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.