யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
கொரோனா தொற்றாளர்கள் உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு செல்லாததனால் அவர்களை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும் , எனவே நிலைமை மோசமாக முன்னர் மருத்துவமனைக்கு செல்லுமாறும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,
அதிக காய்ச்சலுடன் ஏனைய வருத்தங்கள் இருக்கின்ற பொழுது கட்டாயம் வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சிலர் வீடுகளில் இருந்து தங்களைத் தாங்களே சிகிச்சை அளித்துக் கொண்டு இருப்பினும் அனைவருமே வைத்தியரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகச் சிறந்தது.
குறிப்பாக தொற்று ஏற்பட்டு மூன்று, நான்கு நாட்களுக்குப் பின்னர் நியூமோனியா காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டாலும் சில நாட்களின் பின்னர் நோய் நிலை அதிகரித்து உடல் செயலிழப்பு ஏற்படும்.
மேலும் நோயாளர்கள் இவ்வாறு சில நாட்கள் தாமதித்து வருவதினால், சில சமயங்களில் அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் அறிவிறுத்தினார்.