உக்ரைனுக்கு மிக பெரும் தொகையை அள்ளித்தரும் அமைப்பு!
உக்ரைன் நாட்டிற்கு 1.4 பில்லியன் (இலங்கை மதிப்பில் 35 கோடி ரூபா) அவசர உதவியாக வழங்குவதற்கு சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்கு சுமார் 1.4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) முடிவு செய்தது. இது தொடர்பாக விவாதிக்கும் நிர்வாக குழுவின் கூட்டம் நேற்று முன் தினம் செவ்வாய்கிழமை (08-03-0-2022) இடம்பெற்றது.
இது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா (Kristalina Georgieva) தெரிவிக்கையில்,
“'உக்ரைன் மீதான ரஷ்ய போரினால் ஏற்பட்ட அதிர்ச்சியை சமாளிக்க, உக்ரைனுக்கு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் ஒப்புதலுக்காக நிர்வாக குழுவிற்கு அனுப்பியுள்ளோம்.
உக்ரைன் மீதான விவாதத்தை 'சீர்திருத்தங்கள்' என்பதில் இருந்து 'நெருக்கடி மேலாண்மை' என மாற்றியுள்ளோம்' என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் சிக்கியுள்ள உக்ரைனுக்கு 140 கோடி டாலர் (ரூ.10 ஆயிரத்து 640 கோடி) நிதியுதவி வழங்க சர்வதேச நிதியத்தின் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
உக்ரைனுக்கு அவசர நிதி தேவைகளை பூர்த்தி செய்யவும், போரால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை தணிக்கவும் இந்த நிதியுதவி அளிக்கப்படுவதாக சர்வதேச நிதியம் கூறியுள்ளது.