தவெகவை ஆட்சியமைப்பதில் இழுபறி.....ஆளுநருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் அமைதியை பேணும் வகையில் செயல்பட்டு வரும் சூழலில், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் இந்த எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்பதில் இன்னும் இளுபறி நிலையே நீடித்து வருகின்ற நிலையில் ஆளுநரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.